ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
by மீனு Today at 2:03 pm

» செத்துப்போ!
by மீனு Today at 2:01 pm

» என் விழி
by rifas Today at 2:01 pm

» கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!
by rifas Today at 2:00 pm

» ஈகரை நண்பர்கள்ளுக்கு காலை வணக்கம்.
by மீனு Today at 1:58 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by மீனு Today at 1:56 pm

» ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
by மீனு Today at 1:55 pm

» மீனுவின் இசை இளவரசனுக்காக
by rifas Today at 1:49 pm

» திருமண வாழ்த்து அட்டை [ PSD Template ]
by இளவரசன் Today at 1:35 pm

» இளவரசன்னா உங்களிடம்????????
by இளவரசன் Today at 1:16 pm

» அவள் தான் அம்மா
by rifas Today at 1:07 pm

» வாங்க விரதம் இருக்கலாம்
by paarthaa077 Today at 12:59 pm

» தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
by இளவரசன் Today at 12:55 pm

» அம்மா
by rifas Today at 12:55 pm

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by சுடர் வீ Today at 12:45 pm

» என் காதலின் ஏக்கம் !!!!!
by rifas Today at 12:45 pm

» என்னவள் A to Z வரை
by VIJAY Today at 12:38 pm

» ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
by VIJAY Today at 12:38 pm

» ஈகரை கண்ணோட்டத்தில்,உங்களுக்கு பயனுள்ள சில தகவலை சொல்ல
by nirshan2007 Today at 12:34 pm

» Premium accounts for Best downloads sites.
by இளவரசன் Today at 12:30 pm

» any one help me
by இளவரசன் Today at 12:28 pm

» பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்
by paarthaa077 Today at 12:12 pm

» உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
by nirshan2007 Today at 12:12 pm

» உடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )
by இளவரசன் Today at 12:08 pm

» சத்துமாவு & சத்துபானம்
by nirshan2007 Today at 12:07 pm

» ஸ்டெயிலு........ ஸ்டெயிலு !
by nirshan2007 Today at 12:03 pm

» உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
by nirshan2007 Today at 11:43 am

» இளநரைக்கு சிறந்த மருத்துவம்
by யாழவன் Today at 10:31 am

» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
by kavinele Today at 10:23 am

» புலி வருது
by யாழவன் Today at 10:07 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!

View previous topic View next topic Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!

Post by தாமு on Tue Oct 20, 2009 12:22 pm

என் அம்மா சாம்பார், சட்னி, ரசம், கூட்டு போன்ற உணவுவகைகளில் மிக அதிகமாகக் கடுகு தாளித்துச் சேர்க்கிறார். கேட்டால், "நல்லது, சாப்பிடு' என்கிறார். அவர் கூறுவது சரியா?



ரம்யா, காங்கேயம்
.





பாவ பிரகாசர் எனும் முனிவர் கடுகைப் பற்றிக் கூறுவதாவது:



ரúஸ பாகே கடு: நாக்கின் சுவையிலும், ஜீரணத்தின் இறுதியிலும் காரமானது. காரமான சுவையுள்ளதால் பித்த உடல்வாகு கொண்டவர்களுக்கு இது அதிக அளவில் சேர்க்கத்தக்கதல்ல. இதை அதிகமாக உபயோகப்படுத்தினால் நா வறட்சி, எரிச்சல் முதலியவை ஏற்படும். அதைக் குறைக்க இனிப்பு வகைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.





ஸ்நிக்த: குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரக் கூடியது. இந்த எண்ணெய்ப் பசையினால் வயிற்றில் வாயு சேராமல் சுறுசுறுப்புடன் குடலை இயங்கச் செய்யும். கடுகெண்ணெய் மிகவும் சூடு தரக்கூடியது. வசிக்கும் சூழ்நிலை, தட்ப வெப்பநிலை ஏற்றதாக இருந்தால் இது ஒத்துக் கொள்ளும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மந்தமாகிவிடும். ஆனால் மண்ணீரல் பெருத்து கெட்டுப் போன நிலையில் இது கலந்த மிகவும் உணவு மிகவும் நல்லது.





மண்ணீரலிலுள்ள அடைப்பை அகற்றி அங்குள்ள வீக்கத்தைக் குறைத்து விடும் தன்மையுடையது.



தீக்க்ஷ்ணோஷ்ண: ஊடுருவும் தன்மை கொண்டது. சூடான வீர்யத்தை உடையது. கடுகின் இந்த இருவகைக் குணங்களைக் கொண்டு வாந்தி எடுக்க அதைப் பயன்படுத்தலாம். இரைப்பை சோம்பல், மார்பில் கபம், இரைப்பையில் பித்த சேர்க்கை, விஷப் பொருளைச் சாப்பிட்டநிலை போன்றவற்றில் 6 - 8 கிராம் அளவு கடுகு, 10 கிராம் இந்துப்பு ஆகியவற்றைத் தூளாக்கி அரை லிட்டர் சூடான தண்ணீரில் கலக்கிச் சிறிது சிறிதாகக் குடிக்க, சிறிதுநேரத்தில் வாந்தி ஏற்படும்.





மறுபடியும் குடிக்க, திரும்பவும் வாந்தியாகும். இப்படியாக இரைப்பையில் ஏற்பட்டுள்ள உபாதைகளை மிக எளிதாக நிவர்த்தி செய்து கொள்ளலாம். உடல் களைப்பு, ஆயாஸம், உமட்டலோ இல்லாத எளிய வாந்தி செய்யும் முறையாகுமிது.

கபவாதக்ன: கப வாத தோஷங்களால் ஏற்படும் உபாதைகளை நீக்கக் கூடியது.





கடுகுத் தூளையும் அரிசி மாவையும் சம அளவில் சேர்த்துக் கிளறித் துணியில் தடவி வயிற்றுவலி, குடைச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் மேல் போடுவது நல்லது. உடனே வலி குறையும். மார்பிலுள்ள கபம் கரைய இதை மார்பில் போடலாம். இதைப் பிடறியில் போட, தலையிலுள்ள நீர்க்கோவையினால் ஏற்படும் இசிவு வலி, விரைப்பு போன்றவை குறையும். காய்ச்சல், பேதியினால் ஏற்படும் கெண்டைக்கால் சதைப் பிரட்டல், இசிவு வலியிலும் போடலாம்.





ரக்தபித்தாக்னிவர்த்தன: ரத்த பித்தங்களைக் கெடுத்து உடலிலுள்ள நுண்ணிய ஓட்டைகளின் வழியாக வெளியேற்றும். பசித்தீயைத் தூண்டும். உணவில் எண்ணெய் அல்லது நெய்யுடன் கடுகைத் தாளித்துச் சேர்த்துச் சாப்பிட, நன்கு பசியைத் தூண்டி ஜீரணத்திற்கு உதவுகிறது. தாளிக்காமல் பச்சையாகச் சேர்த்தரைத்த உணவை அடிக்கடி சாப்பிட வயிற்றில் வேக்காளம் ஏற்படும்.





கண்டுகுஷ்டகோடகிருமிக்ரஹான் ஜயேத்: அரிப்பு, குஷ்டம், வட்டத் தடிப்பு, கிருமி, கிரக உபாதை போக்கும். பெரிய கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை மேலே தடவிக் கொண்டாலும் உள்ளுக்குச் சாப்பிட்டாலும் கசிவும் அரிப்பும் தடிப்பும் உள்ள சரும நோய் விலகும். கடும் தொற்று நோய் உள்ளவர்கள் தங்கும் அறைகளில், மாசுபட்டுள்ள காற்றைச் சுத்தமாக்க கடுகைப் புகை போடுவது இன்றும் சில கிராமங்களில் வழக்கத்திலுள்ளது.





கைய்ய தேவ நிகண்டுவில் "பத்தமூத்ரவிட்' சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது கடுகுக் கீரையை அதிகம் பயன்படுத்தினால் புளிப்பு அதிகமாகி ஜீரணம் கெட்டுவிடும். குடல் சூடு அதிகமாவதால் சிறுநீர் சுண்டி, அதன் வெளியாவது குறைந்துவிடும். குடலில் நீர்ப்பசை குறைவதால் மலம் இறுகிவிடும். இதற்குக் குடல் வறட்சியினால் ஏற்படும் மலம் சிறுநீர்க்கட்டிற்கு "பத்தமூத்ரவிட்' என்று பெயராகும்.





அதனால் உங்களுடைய அம்மா உங்களுடைய இரைப்பை மந்தமாகாமலிருக்கவும், அவ்விடத்திலுள்ள சுரப்பிகளைத் தூண்டிவிடவும்தான் கடுகை அதிகம் சேர்க்கிறார். இருந்தாலும் கடுகைச் சிறிய அளவில் சேர்த்துச் சாப்பிடுவதே நல்லது என்பதை அம்மாவிடம் தெரிவிக்கவும்.


நன்றி

[url=http://www.dinamani.com/edition/searchresult.aspx?AliasName=2v8dS3gjtglhYUq0FzEtbT1B5LXKV|hVnrV84UMo3JnDOqg8VTG9KchQ75VMT|sw97g6HuIzD0an|RCxlhNj2ISVzaKG/H17P|5dVZdQaHs=]பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்[/url]

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4344
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரைப்பை மந்தத்தை விரட்டும் கடுகு!

Post by தாமு on Thu Nov 05, 2009 8:13 am

ஆஸ்துமா, சளி கரைக்கும் கடுகு


சுற்றுச் சூழலில் புகை மாசு கலப்பு, கொசுவர்த்திச் சுருளில் உள்ள அலேட்ரின் என்ற நஞ்சு, காச நோய் பாரம்பரியம், கப உடல் வாகு, ஒவ்வாமை போன்ற பல்வேறு காரணங்களால் ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயால் பல வருடமாக பாதிக்கப்பட்டிருப்பின் இதயத்தின் இடது வெண்டிரிக்கிள் பலவீனமடைந்திருக்கும்.



இதயத்தை பலப்படுத்த தங்கச் சத்துள்ள மருந்துகள் அவசியம். மாரடைப்பு இருப்பின் மாரடைப்பை நீக்கும் மூன்று வேளைகள சித்த மருந்தை சாப்பிட்டு பின் சித்த மருத்துவச் சிகிச்சையை தொடங்க வேண்டும். தொடர்ந்து சில மாதங்கள் செய்ய ஆயுள் வரை மருந்து மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை நோயை நாற்பது நாட்களிலும், புற்று நோய்களை ஐம்பது நாட்களிலும், எய்ட்ஸ் நோயை இருபத்து நான்கு நாட்களிலும்?! சோரியாசிஸ் தோல் நோய்களை ஐம்பது நாட்களிலும், மன நோய்களை பதினெட்டு நாட்களிலும், பித்தப்பை, சிறு நீரக கற்களை இருபது நாட்களிலும், மூட்டு வலிகளை முப்பது நாட்களிலும், மூக்கடைப்பை பத்து நாட்களிலும், சிறு நீரக செயலிழப்பை இருபது நாட்களிலும், இதய நோய்களை முப்பது நாட்களிலும் முழுமையாக குணமாக்கும் சிறப்பு மிகு சித்த மருந்துகள் உண்டு. ஆஸ்துமா நோயாளர்கள் முசுமுசுக்கை இலை இட்லி, கல்யாண முருங்கையிலை அடை, நாய்க்கடுகுத் துவையல், தூதுவளை ரசம், ஓம ரசம் இவைகளில் ஏதேனும் ஒன்றினை தினசரி உணவில் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அசுத்தமான காற்றை வெளியேற்றவும், நுரையீரலுக்குள் காற்று எல்லா பகுதிக்கும் சென்று வரவும், தினசரி காலை, மாலை இருவேளைகள் மூச்சுப் பயிற்சி முக்கியமாகும். பலூனை நன்றாக வாயில் வைத்து ஊதி, பின் காற்றை வெளியாக்கி, மீண்டும் ஊத வேண்டும்.

இது போல பத்து தடவைகள் செய்ய வேண்டும். மஞ்சள் பூ பூக்கும்
, குச்சிபோல் காயுள்ள, நாய்வேளைச் செடியின் விதை கடுகு போல் இருக்கும். இந்த நாய்க்கடுகு விதைகள் பத்து கிராமை வறுத்து, பலம் தரும் பத்திய உணவான பழம் புளி, பட்ட மிளகாய், வறுத்த உப்பு வைத்து அரைத்து துவையலாக்கி கடுகு ஒரு ஸ்பூன் போட்டு தாளித்து, மத்திய உணவில் சுடு சோற்றில் கலந்து முதலில் சாப்பிடவும். இது போல் தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். இத்துவையல் செய்து சாப்பிட முடியாதவர்கள் கடுகு 100 gm வறுத்து பொடியாக்கி, இதனுடன் தூள் சர்க்கரை 100 கிராம் கலந்து வைத்துக்கொண்டு தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் இப்பொடியை அறை ஸ்பூன் (4 கிராம்) வீதம் சாப்பிட சளி சேராமல் தடுத்து, சளியை கரைத்து குணமாக்கும்.

குளிர்ச்சிதரும் உணவுகளான பூசணிக்காய், தக்காளிப்பழம், வாழைப்பழம், பால், தயிர், மோர், ஐஸ்கிரீம், எலுமிச்சை பழம், பழச்சாறு சாப்பிடுவதை தவிர்க்கவும். மூக்கடைப்பு உள்ளவர்கள் சித்தர் 'கோரக்கரின்' மூகடைப்பு நீக்கி எண்ணையை தினசரி இரவில் இரண்டு சொட்டுகள் மூக்கில் உறியவும். அதிக அளவில் நெஞ்சு சளியால் அவதிப்படுவோர் சளியை கரைத்து வெளியாக்க தினசரி இரவில் சித்தர் போகரின் கற்பூராதி தைலம் பத்து சொட்டுக்கள் நெஞ்சில் தடவி வரவும். சர்க்கரை, காச நோயுடன், ஆஸ்துமா நோயும் கலந்து உள்ளோர் தங்கச் சத்துள்ள சித்த மருந்துகளை கலந்து நாற்பது நாட்கள் சாப்பிட நற்சுகம் கிடைக்கும்.


நன்றி ‍- லயன்.மரு.க.கோ.மணிவாசகம்

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4344
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum